செய்திகள்,திரையுலகம் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு!…

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு!…

சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராக நடிகை நளினி தேர்வு!… post thumbnail image
சென்னை:-சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் தலைமையில் மூன்று அணிகள் போட்டியிட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக திரைப்பட வசனகர்த்தா லியாஸ் அலிகான் செயல்பட்டார். மொத்தமுள்ள 1,300 வாக்குகளில் 700க்கும் அதிகான வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 8 சுற்றுகள் கொண்ட வாக்குப் எண்ணிக்கையின் தொடக்கம் முதலே நடிகை நளினி முன்னிலையில் இருந்தார். இறுதியில் 273 வாக்குள் பெற்று நடிகை நளினி வெற்றி பெற்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி