அரசியல்,செய்திகள்,முதன்மை செய்திகள் சீன அதிபருக்கு கீதையை பரிசு அளித்த பிரதமர் மோடி!…

சீன அதிபருக்கு கீதையை பரிசு அளித்த பிரதமர் மோடி!…

சீன அதிபருக்கு கீதையை பரிசு அளித்த பிரதமர் மோடி!… post thumbnail image
ஆமதாபாத்:-3 நாள் இந்திய பயணமாக நேற்று ஆமதாபாத் வந்த சீன அதிபர் ஜின் பிங்குக்கு அவர் பகவத் கீதையின் சீன மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினார். மேலும் ஒரு வெள்ளை நிற கதர் மேல் சட்டையையும் பரிசு அளித்தார்.

ஜின் பிங் தான் அணிந்திருந்த வெள்ளை சட்டையின் மேல், மோடி தந்த மேல்சட்டையை அணிந்து கொண்டு சபர்மதி ஆசிரமம் வந்தார். அங்கு, புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது காந்தி பயன்படுத்திய ராட்டையை சுற்றிப்பார்த்தார். அந்த ராட்டையைப் போன்ற குட்டி ராட்டை ஒன்றை சபர்மதி ஆசிரம அறக்கட்டளை, ஜின்பிங்குக்கு வழங்கியது.

சிறிது நேரம் மோடியும், ஜின்பிங்கும் ஊஞ்சலில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். சபர்மதி ஆசிரமத்தில் போடப்பட்டிருந்த பாரம்பரிய கட்டிலில் ஜின்பிங், தனது மனைவி பெங் லியுயானுடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி