செய்திகள் ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!…

ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!…

ஓடும் காரில் 23 வயது இளம்பெண் கற்பழிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய தலைநகர் டெல்லியில் 23 வயது பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் மற்றும் வேறு இரு நபர்களால் ஓடும் காரில் வைத்து கற்பழிக்கப்பட்டார். தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட மூன்று வெறி நாய்களும் பின் அப்பெண்ணை தெற்கு டெல்லியில் உள்ள நேரு பேலஸ் பகுதியில் தூக்கி வீசி விட்டு சென்றுவிட்டனர்.

டெல்லி காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரின் மகளான அப்பெண்ணுக்கு நேற்றிரவு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து அவரை கற்பழித்துள்ளது தெரிய வந்துள்ளளது. தனது ஆண் நண்பருடன் ஊரை சுற்றிப் பார்க்க அப்பெண் காரில் சென்றபோது தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்த பின் அப்பெண் மயங்கி விழுந்ததாக காவல்துறை கூறியுள்ளது. அப்பெண் காவல்துறையினரிடம் வழங்கிய புகாரில் தன்னை ஒரு கும்பல் கற்பழித்ததாக கூறியுள்ளார்.

மயங்கிய நிலையில் நேரு பேலஸ் மேம்பாலத்தில் கிடந்த அப்பெண்ணை பார்த்து ஆட்டோ டிரைவர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்பெண் கற்பழித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரித்து வருவதாக போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி