செய்திகள்,திரையுலகம் கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…

கள்ளசாவி (2014) திரை விமர்சனம்…

கள்ளசாவி (2014) திரை விமர்சனம்… post thumbnail image
பெரிய செல்வந்தரான ராகேஷ் தனது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பார்த்துக்கொள்ள நண்பர் மூலமாக வர்ஷாவை நியமிக்கிறார். வர்ஷாவின் அணுகுமுறை மற்றும் மனைவி மீது காட்டும் பாசம் ராகேஷ் மட்டுமில்லாது அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அவளை பிடித்துப் போய்விடுகிறது.

நெடுநாளாக தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தாம்பத்ய சுகம் கிடைக்காமல் பரிதவித்து வருகிறார் ராகேஷ். இவருடைய வீட்டிலேயே இருந்து மனைவிக்கு பணிவிடை செய்துவரும் வர்ஷா மீது இவரது பார்வை விழுகிறது. ஒருநாள் மது குடித்துவிட்டு போதையில் அவளை பலாத்காரம் செய்துவிடுகிறார் ராகேஷ்.மறுநாள் காலையில் தனது கற்பு போய்விட்டதாக சொல்லி புலம்பும் வர்ஷாவை சமாதானம் செய்கிறார் ராகேஷ். ஆனால், வர்ஷா சமாதானமாக மறுக்கிறாள். தன்னுடைய மானம் அவளால் பறிபோய்விடுமோ என பயப்படும் ராகேஷ் அவளை வேலையிலிருந்து தூக்கிவிட முடிவெடுக்கிறார். ஆனால், அவளுடைய மனைவி அவள் மீது அதிக பாசமாக இருப்பதால் அவளை வேலையிலிருந்து தூக்க முடியவில்லை.இறுதியில் ராகேஷ் என்ன முடிவெடுத்தார்? என்பதே மீதிக்கதை.

‘திருடா திருடி’ படத்தில் தனுஷுடன் கவர்ச்சி ஆட்டம் போட்ட வர்ஷா, இந்த படத்தில் சற்று உடல் பெருத்து கூடுதல் கவர்ச்சியுடன் களமிறங்கியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் வரவில்லை. செல்வந்தருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளில் இவருடைய முகபாவணைகள் நம்மையும் கிரங்க வைக்கின்றன. படம் முழுக்க சேலையுடன் வந்தாலும் கவர்ச்சியில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.ராகேஷ் கதாபாத்திரத்தில் வரும் கவின் மற்றும் அவரது மனைவியும் ஓரளவுக்கு நடித்திருக்கிறார். ராகேஷின் மகளாக வருபவர் மாடர்ன் உடைகளில் அழகாக இருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவர் அணிந்திருக்கும் உடை நம்மை கிளுகிளுப்பாக்குகிறது.

காமம் என்பது ஒரு மனிதனுடைய வாழ்வில் அவசியமான ஒன்று. ஆனால், அந்த காமம் அளவுக்கு மீறி சென்றால் அது நமக்கே ஆபத்தில் முடியும் என்ற ஆழமான கருத்தை சொல்ல வந்த இயக்குனர் ராஜேஷ்வரன், கதையில் ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளை நீளமாக வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக ராகேஷ் மது குடிக்கும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை.ராஜ் பாஸ்கர் இசையில் பாடல்களை கேட்கவே முடியவில்லை. பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. என்.கிருஷ் ஒளிப்பதிவு ஓரளவு பரவாயில்லை.

மொத்தத்தில் ‘கள்ளசாவி’ காமம்……….

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி