செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!…

மறைந்த நடிகர் நாகேஸ்வரராவுக்கு தபால்தலை வெளியிடுகிறது அமெரிக்கா!… post thumbnail image
சென்னை:-தெலுங்கு சினிமாவின் சிவாஜி என்று அழைக்கப்பட்ட அக்னினேனி நாகேஸ்வரராவ் சமீபத்தில் மறைந்தார். அவரது பிறந்த நாள் வருகிற 20ம் தேதி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்களும், குடும்பத்தினரும் முடிவு செய்திருக்கிறார்கள். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள அக்கினேனி பவுண்டேஷன் நாகேஸ்வரராவின் பெருமைகளை சொல்லி அவரது தபால்தலை வெளியிட வேண்டும் என்று கேட்டு அமெரிக்க அஞ்சல்துறைக்கு கடிதம் எழுதியது.

அதனை ஏற்றுக்கொண்ட அமெரிக்க அஞ்சல்துறை நாகேஸ்வரராவின் தபால்தலையை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளது. வருகிற 20ம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் நாகேஸ்வரராவின் பிறந்த நாளில் இந்த தபால்தலை வெளியிடப்படுகிறது என்று அக்கினேனி பவுண்டேஷன் அறிவித்துள்ளது.

தகவல் அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தோம். எனது தந்தைக்கு அமெரிக்கா அளித்துள்ள கவுரவத்திற்கு நன்றி என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார் நாகேஸ்வரராவின் மகனும், தெலுங்கு நடிகருமான நாகார்ஜுனா.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி