செய்திகள்,திரையுலகம் நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…

நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி…

நாய்களை அடிப்பவரின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும்!… நடிகை இஷா குப்தா அதிரடி… post thumbnail image
மும்பை:-பாலிவுட் நடிகை இஷா குப்தாவுக்கும் நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதனால் தனது வீட்டில் பல தெரு நாய்களை வளர்த்து வருகிறாராம். அந்த நாய்களை பராமரிக்கவே ஒரு பெருந்தொகையை செலவு செய்து வரும் இஷா குப்தா, யாராவது நாய்களை துன்புறுத்தும் விசயம் அறிந்தால் அவர்களை தேடிப்பிடித்து சண்டை செய்கிறாராம்.

அதோடு, நாய்களை அடிப்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் ஆவேசமாக குரல் கொடுத்து வரும் இஷாகுப்தா, நாய்களை தாக்குவதால் அதன் உறுப்புகள் பாதிக்கப்படும் அதனால் உறுப்புக்கு உறுப்பு என்கிற முறையில் தாக்குபவர்களின் மர்ம உறுப்பை அறுக்க வேண்டும். அப்படி கடுமையான தண்டனை கொடுத்தால்தான் வாயில்லா ஜீவன்களை துன்புறுத்தும் எண்ணம் யாருக்கும் வராது என்று கூறியுள்ள இஷாகுப்தா, யாராவது நபர்கள் நாயை அடிப்பதை கண்டால் என்னிடம் பிடித்து தாருங்கள் அதற்கு சன்மானமாக உங்களுக்கு ஒரு லட்சம் தருகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி