செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…

சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!…

சினிமாவிலிருந்து ஓய்வு – நடிகர் விஜய்யின் அப்பா அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகும் ‘டூரிங் டாக்கீஸ்’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. இது குறித்து தேனியில் சந்திரசேகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாட்டில் நடக்கும் பல தவறுகளை சுட்டிக்காட்டி படம் எடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததால்,சமூக கருத்து கொண்ட பல படங்களை இயக்க முடிந்தது. இது வரை 68 படங்களை இயக்கி உள்ளேன். தற்போது எடுக்கப்படும் 69வது படத்துடன் இயக்குனர் தொழிலில் இருந்து ஓய்வு பெறப்போகிறேன்.

பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் சிறு குழந்தைகள்,70 வயது முதியவரின் காதல், தமிழகத்தில் இருந்து வெளிநாடு சென்று நம் கலாசாரம் மறந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தால் என்னவாகும், என்ற மூன்று கதைகளை ஒரு கதைக்குள் அடக்குவதே ‘டூரிங்டாக்கீஸ்’.காதலுக்கு வயதில்லை.மனதுக்குள் வரும் மென்மையான அழகான உணர்வுதான் காதல். நமக்குள்ளும் காதல் உணர்வு இருந்தால் இளைஞனாகவே இருக்கலாம். ‘டூரிங்டாக்கீஸ்’ படத்தில் 70 வயது முதியவராக நானே நடிக்க உள்ளேன். இது எனது கடைசி படமாககூட இருக்கலாம்.

மகன் விஜய் வற்புறுத்துவதால்,இயக்குனர் தொழிலில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். என்னால் அறிமுகப்படுத்தப்பட்ட பலரும் இன்று உயர்ந்த நிலையில் உள்ளனர். இப்படத்தின் கதாநாயகி சினுலட்சுமியும் உயர்ந்த நிலைக்கு செல்வார். கதையே படத்தின் கதாநாயகன். எந்த படத்திலும் கதைதான் நாயகனை உருவாக்கும், நாயகனால் கதை உருவாவதில்லை.புது முகங்களை வைத்து படம் எடுக்கும்போது டென்ஷன் அதிகமாகும். அரசியல் தொடர்பாக எந்த கருத்தும் கூற விரும்பவில்லை. டூரிங் டாக்கீஸ் படத்தின் ரீலீஸ் எப்போது என்பது குறித்து இலக்கு ஏதும் இல்லை, என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி