செய்திகள்,திரையுலகம் கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..

கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!..

கவர்ச்சி விஷயத்தில் நடிகை சமந்தாவின் கெடுபிடியால் கோபத்தில் தெலுங்கு திரையுலகம்!.. post thumbnail image
சென்னை:-நடிகை சமந்தா திடீரென்று தன் கவர்ச்சி செக்போஸ்ட்டை தாண்டி விட்டதால், ஆந்திராவின் கமர்சியல் பட அதிபர்கள் அவரை முற்றுகையிட்டு வருகின்றனர். சமந்தாவின் நீச்சல் உடை கலாசாரத்திற்கு, அவரின் அபிமானிகளும், ரசிகர்களும்,இணையதளம் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி தொடர்ந்து நடித்தால், இன்னும் ஓரிரு படங்களோடு மார்க்கெட் காலியாகிவிடும் என்றும், அவரை அச்சுறுத்துகின்றனர்.

அதனால், புதிதாக ஒப்பந்தமாகும் படங்களில் கிளாமராக நடிக்க மாட்டேன் என, திடீர் பல்டி அடித்துள்ளார் சமந்தா. இதனால், தமிழ்ப் படங்களில் கிளாமராக நடித்த சமந்தா, தெலுங்கில் நடிக்க மறுத்து, ஆந்திர ரசிகர்களுக்கு துரோகம் செய்கிறார் என, அங்குள்ளவர்கள் பொருமத் துவங்கியுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி