செய்திகள்,திரையுலகம் நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…

நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!…

நடிகர் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்டு!… post thumbnail image
சென்னை:-இரண்டு வருடங்களாக தயாரிப்பில் இருக்கும் ஐ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டை செப்டம்பர் 15ம் தேதி அன்று பிரம்மாண்டமான விழாவாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். இசை வெளியீட்டு விழாவில், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாசனேகர் கலந்துகொள்கிறார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தம்பி ரமேஷ் பாபு, ‘ஐ’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு அர்னால்டுவை அழைப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருக்கிறார். விழாவிற்கு வர சம்மதம் தெரிவித்த அர்னால்டு ‘ஐ’ படம் பற்றியும் சிலாகித்துப் பேசினாராம். குறிப்பாக ஹீரோ விக்ரம் இப்படத்திற்காக 120 கிலோ, 70 கிலோ, 50 கிலோ என தன்னை உருமாற்றி நடித்திருப்பதைப் பற்றியும் வியந்து பேசினாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி