செய்திகள்,திரையுலகம் புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…

புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…

புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!… post thumbnail image
சென்னை:-கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் வை ராஜா வை.கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வை ராஜா வை படத்தின் கதையை கல்பாத்தி அகோரத்திடம் ஐஸ்வர்யா சொன்னபோது இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டாராம் கல்பாத்தி.

ஐஸ்வர்யாவோ தனுஷ் நடிப்பதை விரும்பவில்லை. எனவே கௌதம் கார்த்திக் ஹீரோவானார். பாதி படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், ஒரு பாடலை கம்போசிங் செய்தபோது இப்படத்துக்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்ட அந்தப்பாடலை தனுஷ் எழுதட்டும் என்று சொன்னாராம். வேற வழியில்லாமல் ஒப்புக்கொண்டாராம் ஐஸ்வர்யா.தனுஷ் எழுதிய பாடல் வரிகளைப் படித்த யுவன் சங்கர்ராஜா, அந்தப்பாடலை தன் அப்பா இளையராஜா பாடினால் சிறப்பாக இருக்கும் அபிப்ராயப்பட்டு இளையராஜாவைப் பாட வைத்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல் உரிமையை பெற்றுள்ள சோனி மியூசிக் நிறுவனம் ஆடியோவை வெளியிடுகிறது. தான் எழுதிய பாடலை இளையராஜா பாடுவது பற்றி, இளையராஜா அவர்களின் தெய்வீகக் குரலில் நான் எழுதிய பாடல் வெளியாவது அளவற்ற சந்தோஷமாக உள்ளது என்று ட்விட்டரில் புளகாங்கிதப்பட்டிருக்கிறார் தனுஷ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி