செய்திகள்,திரையுலகம் இயக்குனர் பார்த்திபன் எடுத்த அதிரடி முடிவு!…

இயக்குனர் பார்த்திபன் எடுத்த அதிரடி முடிவு!…

இயக்குனர் பார்த்திபன் எடுத்த அதிரடி முடிவு!… post thumbnail image
சென்னை:-பார்த்திபன் இயக்கி தயாரித்திருக்கும் படம் – கதை திரைக்கதை வசனம் இயக்கம். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதாநாயகன் சினிமாவில் டைரக்டராக முயற்சி செய்பவன். எனவே பல சினிமா நட்சத்திரங்களை சந்தித்து கதை சொல்வதுபோல் நிறைய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த படத்தை ஆகஸ்ட் 1ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார் பார்த்திபன்.அன்றைய தினம் ஜிகர்தணடா, சரபம், சண்டியர் என நிறைய படங்கள் வெளியாக இருந்ததால் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் ரிலீஸை ஆகஸ்ட் 29 வினாயகர் சதுர்த்திக்கு தள்ளி வைத்தார் பார்த்திபன்.

ஆகஸ்ட் 29 அன்றும் ஏகபட்ட படங்கள் திரைக்கு வரவிருக்கும் தகவல் அதன் பிறகே அவருக்கு தெரிய வந்திருக்கிறது. எனவே அதிரடியாக தன் முடிவை மாற்றிக்கொண்டு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை ஆக்ஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்துவிட்டார் பார்த்திபன்.அன்றைய தினம்தான் சூர்யா, லிங்குசாமி கூட்டணியில் தயாரான அஞ்சான் படம் ரிலீசாகிறது. ஆனாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் படத்தை களத்தில் இறக்க முடிவு செய்துவிட்டார் பார்த்திபன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி