செய்திகள்,திரையுலகம் சிக்கலில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சிக்கலில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!…

சிக்கலில் சிக்கிய நடிகர் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றி மூலம் தமிழ்த் திரையுலக வியாபாரத்தில் உச்சத்தைத் தொட்டவர் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு முன்பே லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசி அட்வான்ஸும் கொடுத்திருந்தார்களாம். சில மாதங்களுக்கு முன் பொன்ராம் இயக்கத்தில் படத்தை ஆரம்பிக்கலாம் என முடிவான போது, சிவகார்த்திகேயனின் சம்பள விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனத்தினர் முன்னர் பேசிய சம்பளத்தை மட்டும்தான் தருவோம் என்றிருக்கிறார்கள். ஆனால், சிவகார்த்திகேயனோ தற்போதையை மார்க்கெட் நிலவரப்படித்தான் சம்பளத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றிருக்கிறார். பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு சுமார் 6 கோடி ரூபாய் வரை சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் தருவதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் படம் ஆரம்பிப்பதற்கு முன்பே தொலைக்காட்சி உரிமையையும், சில ஏரியாக்களையும் சில பல கோடிகளுக்கு விற்று கல்லா கட்டி விட்டார்களாம். விஷயம் தெரிந்த சிவகார்த்திகேயன் தரப்பு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறதாம். இந்த ஆண்டில் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனம் ‘கோலி சோடா, மஞ்சப்பை, சதுரங்க வேட்டை’ படங்களின் மூலம் வசூல் வேட்டையில் முதலிடத்தில் இருக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி