செய்திகள்,திரையுலகம் டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராமானுஜன்!…

டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராமானுஜன்!…

டொரன்டோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் ராமானுஜன்!… post thumbnail image
சென்னை:-ஞானராஜசேகரன் கணித மேதை ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துள்ளார். இன்று ஏடிஎம் மிஷன் பாஸ்வேர்டு போன்ற டெக்னாலஜிக்கு அவரது கண்டுபிடிப்புகளே மூல காரணம். அப்படிப்பட்ட ஒரு மேதையின் படம் திரைப்படமாக வந்திருக்கிறது. ஜெமினிசாவித்திரியின் பேரன் அபினய், ராமானுஜனாக நடித்திருந்தார்.

பாமா அவரது மனைவியாக நடித்திருந்தார். இவர்கள் தவிர சுஹாசினி, நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சமீபத்தில் வெளியான இப்படம் அனைவரது பாராட்டையும் பெற்றார்.இந்நிலையில் இப்படத்தை இந்தாண்டு செப்டம்பரில், டொரன்டோவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது.

இதுகுறித்து கேம்பர் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் கூறுகையில், ராமானுஜன் படம் அவரது வாழ்க்கை வரலாற்றை சொல்கிற படம். அதோடு அவரது சாதனையையும் விளக்கிய படம். ராமானுஜனின் வாழ்க்கையை உலகளவில் சொல்லவே வோன் ரயான்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இங்கு திரையிட உள்ளோம் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி