செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!…

மீண்டும் தேசிய விருதை குறிவைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா!… post thumbnail image
மும்பை:-திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்பும் குத்துச்சண்டையில் ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மேரி கோமின் வாழ்க்கையை அப்படியே சினிமாவாக எடுக்கிறார்கள். ஓமங் குமார் இயக்குகிறார். சஞ்சய் லீலா பன்சாலி தயாரிக்கிறார்.இந்தப் படத்தில் பிரியங்கா சோப்ரா மேரிகோமாக நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும் கேலியும் கிண்டலும் செய்தது பாலிவுட்.

மேரிகோமின் தோற்றத்துக்கும், பிரியங்காவின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை. மேரிகோம் உடல் இரும்பு மாதிரி உருண்டு திரண்டு சிக்ஸ் பேக்குடன் இருக்கும். பிரியங்காவின் உடம்பு மென்மையானது என்ற விமர்சனங்கள் வந்தது.அத்தனையும் உடைத்து எரிந்து விட்டார் பிரியங்கா. மூன்று மாதங்கள் மேரிகோமோடு தங்கியிருந்து அவரிடம் குத்துச் சண்டையின் அடிப்படை விதிகளையும், அவரது மேனரிசங்களையும் கற்றுக் கொண்டார்.

கடுமையான உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்தார். இப்போது நடித்தும் முடித்து விட்டார் படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீசாகிறது. கமர்ஷியல் படங்களில் கான் நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்காவுக்கு ஏற்கனவே பேஷன் என்ற படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இப்போது மேரிகோம் மூலம் அதனை மீண்டும் ஒரு முறை எட்டிவிடுவார் என்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி