செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!… post thumbnail image
போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும் சர்வதேச நிதி இணையத்தை போல் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனியாக ஒரு நிதி இணையம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இருந்து வந்த நிலையில், 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க நேற்று முடிவு செய்யப்பட்டது.

இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு, வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும், முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷியாவும் இடம் பெறுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.பிரிக்ஸ் வங்கிக்கான முதல் மூலதன தொகையாக சீனா 41 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், இந்தியா, ரஷியா, பிரேசில் ஆகிய நாடுகள் தலா 18 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், தென் ஆப்பிரிக்கா 5 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் வழங்க முன் வந்துள்ளது.

இன்னும் 2 ஆண்டுகளுக்குள் செயல்பட தொடங்கும் இந்த வங்கி இந்த மூலதன தொகையையினை கொண்டு பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்குள் ஏற்படும் திடீர் பொருளாதார நெருக்கடி காலத்தில் நிதி உதவிகளை செய்யும்.இந்த வங்கியின் முதன்முறை தலைவராக பொறுப்பேற்கும் இந்தியா 6 ஆண்டுகளுக்கும், அந்த பதவிக்காலம் முடிந்த பின்னர் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிரேசிலும், பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு ரஷியாவும் பிரிக்ஸ் வங்கியின் தலைமை பொறுப்பை வகிப்பது என்று பிரிக்ஸ் உறுப்பினர்களாக உள்ள 5 நாட்டு தலைவர்களுக்குள் இன்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி