செய்திகள்,திரையுலகம் நடிகர் ஜெயம்ரவியை புகழும் இயக்குனர்கள்!…

நடிகர் ஜெயம்ரவியை புகழும் இயக்குனர்கள்!…

நடிகர் ஜெயம்ரவியை புகழும் இயக்குனர்கள்!… post thumbnail image
சென்னை:-நடிகர் ஜெயம்ரவி எந்த மாதிரியான ரிஸ்க்கான காட்சிகளில் நடிக்கவும் தயங்காதவர். ஒரு படத்துக்காக 2 வருடத்திற்கும் மேலாக அவர் உழைக்கிறார். அதைத்தான் முன்பு ஆதிபகவன் படத்தில் நடித்தபோது, ஒரே காட்சியை எத்தனை முறை நடிக்கச் சொன்னாலும், முகம் சுழிக்காமல் நடிப்பதில் ஜெயம்ரவிக்கு இணை யாருமே இல்லை என்று டைரக்டர் அமீர் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து நிமிர்ந்து நில் படத்தில் நடித்தபோது சமுத்திரகனியும், நான் இதுவரை எத்தனையோ ஹீரோக்களை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். ஆனால், ஜெயம்ரவியை வைத்து படமெடுத்தால் நமக்கு எந்த டென்சனும் இருக்காது. சொல்லிக்கொடுத்ததை மனதில் வாங்கிக்கொண்டு உடனே அதை வெளிப்படுத்தி விடுவார். அதிலும், ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நாம் எத்தனை உயரத்தில் இருந்து குதிக்க சொன்னாலும், மறுகணமே ரெடியாகி விடுவார்.

அந்த அளவுக்கு தொழிலை மதிக்கக்கூடியவர். நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன். இப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்ற விவகாரம் செய்கிற நடிகர்களுக்கு மத்தியில், ஜெயம்ரவி ரொம்ப வித்தியாசமானவர் என்று சொல்லும் சமுத்திரகனியும், அமீரைப்போலவே, நான் இதுவரை இயக்கிய ஹீரோக்களில் மீண்டும் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறீர்கள்? என்று கேட்டால், ஜெயம்ரவியின் பெயர்தான் முதலாவதாக இடம் பெறும் என்கிறார்கள். அந்த அளவுக்கு டைரக்டர்களை கவர்ந்த நடிகராகிக்கொண்டிருக்கிறார் ஜெயம்ரவி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி