செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…

ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி…

ரஷ்யாவில் மெட்ரோ ரெயில் தடம்புரண்டு விபத்து!…10 பேர் பலி… post thumbnail image
மாஸ்கோ:-ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று காலை வேளையில் மெட்ரோ ரெயில் விபத்துக்குள்ளானது. வடமேற்கு பகுதியில் இருந்து மத்திய பகுதிக்கு புறப்பட்ட அந்த ரெயில், ஸ்லேவியான்ஸ்கி போலிவார்ட் மற்றும் பார்க் பாபடி ரெயில் நிலையங்களுக்கு இடையில் சுரங்கப்பாதையில் திடீரென தடம்புரண்டது. மின்னழுத்த மாறுபாடு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சுரங்கத்திற்குள் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விரைவாக செயல்பட்டு 200 பயணிகளை மீட்டனர்.இந்த விபத்தில் 10 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஸ்டிரெச்சர்கள் மூலம் வெளியில் கொண்டுவரப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் ஹெலிகாப்டரில் விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் சுமார் 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி