அவர் தனது கடிதத்தில், கடந்த 18 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியது தனக்கு கிடைத்த பாக்கியம் மற்றும் கவுரவம் என்று கூறியுள்ள ஜெயவர்தனே, டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான சமயம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் ஒருநாள் போட்டிகளில் முழு ஈடுபாட்டுடன் விளையாட உள்ளதாகவும் தெரிவித்தார்.எனவே, 2015ல் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயவர்தனேவை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னணி பேட்ஸ்மேனான ஜெயவர்தனே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வரும் 16 மற்றும் 24-ம் தேதி நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார். அதன்பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட உள்ளார்.1997ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமான ஜெயவர்தனே, இதுவரை 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11493 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 33 சதங்களும், 48 அரை சதங்களும் அடங்கும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி