இதையடுத்து தனக்கு உதவி செய்த நண்பன் ஆர்யாவுக்கு ஏதாவது ஒரு வகையில் நன்றிக்கடன் செய்ய வேண்டும் என்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் விஷால். அந்த நேரம்தான் பாண்டியநாடு படத்தில் அவர் தயாரிப்பாளரானார். அப்படம் வெற்றி பெற்றதையடுத்து, நான் சிகப்பு மனிதன் படத்தையும் தயாரித்து நடித்த விஷாலுக்கு அப்படமும் ஓரளவுக்கு ஹிட்டாக அமைந்ததால், இப்போது ஹரி இயக்கத்தில் நடிக்கும் பூஜை படத்தையும் தயாரித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ஆர்யாவிடமும் நாமே தயாரிப்பாளரானால், நாம் நினைப்பது போன்ற கதையில் நடிக்கலாம். அதோடு தயாரிப்பாளர் என்கிற கெளரவமும் நமக்கு கிடைக்கும் என்று சொல்லி, இப்போது ஆர்யாவையும் அமரகாவியம் படம் மூலம் தயாரிப்பாளராக்கி விட்டார் விஷால். அதோடு, அடுத்து தான் நடிக்கும் இன்னொரு படத்தையும் தயாரித்து நடிக்கிறார் ஆர்யா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி