செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் 35 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…

35 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார் நடிகை மனோரமா!…

35 நாட்கள் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பினார் நடிகை மனோரமா!… post thumbnail image
சென்னை:-நடிகை மனோரமா கடந்த 2 வருடங்களுக்கு முன்பு முழங்கால் வலிக்காக, ‘ஆபரேஷன்’ செய்து கொண்டார். அதில் இருந்து அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மே மாதம் 28ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் சிறுநீரக கோளாறும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்குப்பின், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தார்.35 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப்பின் மனோரமா இன்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி