செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிக முடக்கம்!… post thumbnail image
மும்பை:-நெட்வொர்க் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மும்பை பங்குவர்த்தகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. பங்குகளின் விலையில் சந்தைக்ககேற்ப மாற்றங்கள் ஏற்படாததையடுத்தே பங்குவர்த்தகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை பங்குசந்தைக்கு நெட்வொர்க் தொழில்நுட்ப சேவை வழங்கும் எச்.சி.எல். நிறுவனம் இக்கோளாறை ஆய்வு செய்து வருகிறது. விரைவில் நெட்வொர்க் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் பங்குவர்த்தக சேவை துவங்கும் என மும்பை பங்குவர்த்தக மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த பங்குவர்த்தக முடக்கத்தால் இன்றைய தினத்திற்குள் பங்குகளை வாங்கி விற்பவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி