செய்திகள்,திரையுலகம் ‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…

‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!…

‘அஞ்சான்’ படத்தின் மூலம் பாடகரானார் நடிகர் சூர்யா!… post thumbnail image
சென்னை:-நடிகர் சூர்யா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘அஞ்சான்’ படத்தில் துள்ளலான பாடல் ஒன்றை பாடியுள்ளார். யுவன் இசையில் அமைந்துள்ள இப்பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என கூறப்படுகிறது. ஏற்கெனவே, விளம்பர படம் ஒன்றிற்கு பாடல் பாடியுள்ள சூர்யா, சினிமாவுக்காக பாடும் முதல் பாடல் இதுதான். இதன் மூலம் சூர்யாவும் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.

‘அஞ்சான்’ படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. வருகிற ஜூலை 17ம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி