செய்திகள்,திரையுலகம் சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…

சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!…

சமந்தாவுடன் ஜோடி சேர விரும்பும் சிவகார்த்திகேயன்!… post thumbnail image
சென்னை:-சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த முதல் படம் மெரினா. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். அதையடுத்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா படங்களில் பிரபலமில்லாத நடிகைகளுடன் நடித்தவர். அதையடுத்து தனுஷ் தயாரிப்பில் நடித்த எதிர்நீச்சல் படத்தில் பிரியாஆனந்துடன் ஜோடி சேர்ந்தார்.

அதன்பிறகு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஸ்ரீதிவ்யாவுடன் நடித்தவர், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன்தான் டூயட் பாட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் ஹன்சிகாவின மார்க்கெட்டும் டல்லடித்திருந்ததால், சிவகார்த்திகேயனுடன் நடிக்க எஸ் சொல்லி அந்த படத்தில் கமிட்டானார்.அதனால், அதற்கு முன்பு வரை முன்னணி ஹீரோயின்களுடன் நடிக்கிற அளவுக்கு நாம் இன்னும் வளரவில்லையோ என்று யோசித்த சிவகார்த்திகேயன் இப்போது நாமும் முன்னணி ஹீரோதான் என்ற முடிவுக்கு வந்திருப்பவர், அடுத்தடுத்து விஜய், அஜீத், சூர்யா போன்ற நடிகர்களுடன் ஜோடி சேரும் நடிகைகளுடன் டூயட் பாட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

அதனால், டாணா படத்தில் தற்போது ஸ்ரீதிவ்யாவுடன் நடித்துக்கொண்டிருப்பவர் அதையடுத்து, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொன்ராமின் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு சமந்தாதான் வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இந்த விசயத்தில் அவர் உறுதியாக இருப்பதால், சமந்தாவின் சம்பளம் தூக்கலாக இருந்தபோதும் அவரை கமிட் பண்ண பேசிக்கொண்டிருக்கிறார்கள். அஞ்சான், கத்தி படங்களை முடித்து விட்டு விக்ரமுடன் பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வரும் சமந்தா, சிவகார்த்திகேயனுடன் நடிக்க 90 சதவிகிதம் ஓ.கே சொல்வார் என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி