செய்திகள்,முதன்மை செய்திகள் மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…

மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…

மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம், மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்தபோது திடீரென ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

சம்பவம் நடந்து 3 மாதங்கள் ஆகியும், இதுவரையில்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளின் விமானங்கள், கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டும், நவீன சாதனங்களை ஈடுபடுத்தியும், இந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியவில்லை.இந்த விமானத்தில் பயணம் செய்த 239 பேரின் குடும்பங்களும் இன்றுவரை தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக் கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

ஆனாலும் இந்த விமானம் மாயமாகி விட்டது என்பதை மலேசிய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்று அதன் வெளியுறவுத்துறை மந்திரி ஹம்ஜா ஜைனுதீன் கூறியுள்ளார்.இந்நிலையில் விமானத்தில் பயணம் செய்த அத்தனை பேரின் குடும்பத்தினருக்கும் விமான இன்சூரன்ஸ் நிறுவனம் ஜெர்மனியின் அலையன்ஸ், தலா 1¾ லட்சம் டாலர் (சுமார் ரூ.1 கோடி) இழப்பீடு வழங்கும் என தெரிய வந்துள்ளது. முதற்கட்டமாக 6 மலேசிய குடும்பங்களுக்கும், ஒரு சீன குடும்பத்துக்கும் முன்தொகையாக 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.30 லட்சம்) வழங்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி