செய்திகள்,திரையுலகம் நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை!…

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை!…

நடிகை ஐஸ்வர்யாராய்க்கு மணிரத்னம் போட்ட கட்டளை!… post thumbnail image
மும்பை:-முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராயை முதல் முதலாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது இயக்குநர் மணிரத்னம்தான். இருவர் படத்தில்தான் முதல் முதலாக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார் ஐஸ்வர்யாராய்.

சில வருட இடைவெளிக்குப் பிறகு குரு படத்தில் அபிஷேக் பச்சனுக்கு ஜோடியாகவும், அதன் பிறகு சில வருட இடைவெளிக்குப் பிறகு ராவணன் படத்தில் அபிஷேக் பச்சன், விக்ரம் இரண்டு பேருக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யாராயை நடிக்க வைத்தார் மணிரத்னம்.மணிரத்னம் – ஐஸ்வர்யா ராய் காம்பினேஷனில் வெளி வந்த மூன்று படங்களுமே வெற்றிப்படங்களில்லை. ஆனாலும் மணிரத்னம் மீது ஐஸ்வர்யாராயுக்கு அளவு கடந்த மரியாதை. திருமணம், குழந்தை என குடும்ப வாழ்க்கையில் செட்டிலானதால், சில வருடகாலமாக நடிப்புக்கு முழுக்குப் போட்டிருந்த ஐஸ்வர்யாராய், இப்போது, மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.

அவருடைய ரீ எண்ட்ரி மணிரத்னம் இயக்கும் படத்தில்தான். தாய்மை அடைந்தபோது செமத்தியாய் வெயிட் போட்டிருந்த ஐஸ்வர்யாராய் தற்போது தன் உடல் எடையை கணிசமாக குறைத்து வருகிறார். மணிரத்னமோ இன்னும் பத்து கிலோ எடையை குறைத்துவிட்டு ஸ்லிம்மாக வரும்படி கூறி இருக்கிறாராம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி