செய்திகள்,திரையுலகம் அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…

அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!…

அம்மா ஆகிறார் நடிகை ஜெனிலியா!… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் ‘சச்சின்’, பரத்துடன் ‘சென்னைக் காதல்’, ஜெயம் ரவியுடன் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, தனுஷுடன் ‘உத்தம புத்திரன்’, மீண்டும் விஜய்யுடன் ‘வேலாயுதம்’ ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். அதோடு, தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

மறைந்த முன்னாள் மகாராஷ்டிரா முதல் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012ம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது ஜெனிலியா கர்ப்பமடைந்திருப்பதாக அவரது கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கை தெரிவித்துள்ளார்.ஆனால், அவர் எத்தனையாவது மாதம் என்பது போன்ற எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. குழந்தை பிறக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

திருமணம் ஆன பின்னும், இந்த காதல் தம்பதியினர் பல பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே கலந்து கொள்வர். ஆனால், சமீப காலமாக அவர்களிருவரும் ஜோடியாக எந்த நிகழ்ச்சிக்கும் வராமலே இருந்தனர். இது பத்திரிகையார்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில்தான் ரித்தேஷும், ஜெனிலியா கர்ப்பமடைந்திருக்கும் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி