செய்திகள்,திரையுலகம் கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…

கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!…

கனடாவில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ரம்பா!… post thumbnail image
சென்னை:-உழவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.சுமார் 100 படங்களில் நடித்துள்ள ரம்பா 2010ம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டு கனடாவிலேயே செட்டிலானார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ரம்பா, தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக உள்ளார். திருமணத்திற்கு பிறகு எத்தனையோ படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.இந்நிலையில் தனது 38வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார் ரம்பா. திருமணத்திற்கு பிறகு தான் ஏன் நடிக்கவில்லை என்ற காரணத்தையும் கூறியுள்ளார் ரம்பா. அவர் கூறியுள்ளதாவது:-குடும்பத்தை பார்க்கவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. தற்போது எனது மகள் லான்சிக்கு மூன்று வயதாகிறது.

அவளை பள்ளிக்கு அழைத்து செல்வது, அவளை கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. அதனால் நான் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவது எல்லாம் பொய்யான தகவல். நான் சினிமாவில் இல்லாவிட்டாலும், எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நிறைய பேர் எனக்கு வாழ்த்து சொல்கிறார்கள். ரசிகர்கள், மீடியாக்கள் எனக்கு கொடுத்த ஆதரவை என்றும் மறக்கமாட்டேன். தற்போது நான் கனடாவில் வசித்து வந்தாலும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி படங்களை தொடர்ந்து பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி