செய்திகள்,விளையாட்டு கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…

கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!…

கிரிக்கெட் வீரர்களை காணவந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!… post thumbnail image
கொல்கத்தா:-7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இறுதிப்போட்டியில் ஜார்ஜ் பெய்லி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை சாய்த்து 2வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கும், அதன் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கானுக்கும், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் இறுதிப்போட்டியில் சதம் அடித்த பெங்காலை சேர்ந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவுக்கும் சமூக வலைதளத்தின் மூலம் மம்தா பானர்ஜி வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியினருக்கு பாராட்டு விழா நடத்த பெங்கால் கிரிக்கெட் சங்கமும், மேற்கு வங்காள அரசும் முடிவு செய்துள்ளது. பாராட்டு விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

இதற்காக, கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு கொல்கத்தா அணி வீரரக்ள் வந்தனர். அவர்களை காண, ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.இதில் ஆறு பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி