செய்திகள் காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…

காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…

காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!… post thumbnail image
ரியாத்:-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பாத்மா என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்தார். காபியை தாமதமாத கொண்டு வந்ததற்காக ஆத்திரமடைந்த அவரது முதலாளி, வேலைக்கார பெண் மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றினார். இதனால் அந்த இளம்பெண்ணின் பின்புறம் மற்றும் கால்கள் பயங்கரமாக சேதமானது.

அலறி துடித்த அந்த இளம்பெண்ணை மற்ற வேலைகாரர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமையை பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள், அந்த பெண்ணின் உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்தனர். உறவினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட முதலாளிக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று சவுதி அரேபிய அரசை கேட்டுக்கொண்டார்.

அவரது முயற்சிக்கு உடனடியாக பலன் கிடைத்தது. பேஸ்புக்கில் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் இளம்பெண்ணின் முதலாளி கைது செய்யப்பட்டார். தற்போது தீவிர சிகிச்சை பெற்று இளம்பெண்ணுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டு தூதரகம் தேவையான உதவிகளை செய்து தருவதாக கூறியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி