செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!…

இந்திய சினிமாவின் நூற்றாண்டை கவுரவிக்க தபால்தலை வெளியிட்ட பிரேசில்!… post thumbnail image
புதுடெல்லி:-இந்திய சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சாதனையைப் பெருமைப்படுத்த இந்திய கிராபிக் டிசைனர் மூலம் வடிவமைக்கப்பட்ட இரண்டு தபால் தலைகளை பிரேசில் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகர் பிரேசிலியாவில் கடந்த 5ம் தேதி சமகால இந்திய சினிமாவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு விழாக் கொண்டாட்டத்தில் இந்தத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

பிரேசிலுக்கான இந்தியத் தூதுவர் அசோக் டோமர் இந்த விழாவின் பொறுப்பாளர் மற்றும் இயக்குனர்களான ஆனந்த் ஜ்யோதி, கரீனா பினி பலக்கபிள்ளியுடன் இணைந்து இந்த தபால் தலைகளை வடிவமைத்திருந்தார்.இந்தத் திரைப்பட விழா டான்ட்ரி ஆர்டே என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஜோதி மற்றும் அவரது மனைவி பலக்கபிள்ளியால் அந்நாட்டின் கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் அந்நாட்டின் தபால்துறை இயக்குனர் ரோமுலோ சல்வினோவும், கலாச்சார செயலர் சுயேலி நவஹோவும் கலந்துகொண்டனர். இந்தத் தம்பதியினர் கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து அங்கு இத்தகைய விழாக்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் கிட்டத்தட்ட 35 இந்தியப் படங்கள் அங்கு திரையிடப்பட்டன. இந்த முறை அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘கதா புருஷன்’ உட்பட இங்கு திரையிடப்பட்ட பல படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த விழாவின் தொடர்ச்சி வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரையிலான உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்குப் பின்னர் ரியோ டி ஜெனிரோ, ரேய்ப்பே, போர்டே அலெகேரே ஆகிய நகரங்களில் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி