செய்திகள்,திரையுலகம் தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…

தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!…

தொடர்ந்து கதாநாயகனாக நடிக்க விரும்பும் சந்தானம்!… post thumbnail image
சென்னை:-நடிகர் சந்தானம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இப்படத்தை ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். பி.வி.பி. சினிமா தயாரித்துள்ளது.சந்தானம் அளித்த பேட்டி வருமாறு:–இதுவரை மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடம் செய்தேன். அறை எண் 305ல் கடவுள், கண்ணா லட்டு தின்ன ஆசையா படங்களில் பிரதான கேரக்டரில் வந்தேன். இப்போது முதல் தடவையாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் கதாநாயகனாகியுள்ளேன்.

இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் உள்ளிட்ட அனைவரும் என்னை ஹீரோ தோற்றத்துக்கு கொண்டு வர மிகவும் கஷ்டப்பட்டனர். படம் நன்றாக வந்துள்ளது. இம்மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம்.கதாநாயகியுடன் ஆடிப்பாடி நடித்தது புது அனுபவம். கஷ்டமாகவும் இருந்தது. மற்ற ஹீரோக்களை கலாய்ப்பது போல் பஞ்ச் வசனங்கள் எழுதி கொடுத்துள்ளேன். இப்போது நானும் நாயகனாகியுள்ளேன். காமெடியனாக நடிப்பதை விட கதாநாயகனாக நடிப்பது ரொம்ப கஷ்டம். சென்டிமென்ட், ஆக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி உள்ளது. கதாநாயகனாக நடிக்க மேலும் சில கதைகள் வந்துள்ளது.

தொடர்ந்து நாயகனாக நடிப்பேன். மற்ற ஹீரோக்கள் படங்களில் காமெடி வேடமும் செய்வேன். விஜய், அஜித், விக்ரம், சூர்யா எல்லோரும் என்னை விட வயதில் பெரியவர்கள். அவர்களை அண்ணன் என்று தான் அழைக்கிறேன்.நான் கதாநாயகன் ஆனதற்காக மற்ற ஹீரோக்கள் பொறாமை படவில்லை. எல்லோரும் வாழ்த்தினார்கள். என் அலுவலகத்தில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போஸ்டர் ஒட்டி இருந்தனர். கமர்சியல் பகுதியில் ரசிகர் மன்ற போஸ்டர் எப்படி ஒட்டலாம் என்று ரெய்டு நடந்தது. உண்மையை விளக்கியதும் போஸ்டரை அகற்றி விடுங்கள் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்கள்.இவ்வாறு சந்தானம் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி