செய்திகள்,திரையுலகம் மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…

மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?…

மீண்டும் சிம்புவுடன் இணைந்தாரா ஹன்சிகா?… post thumbnail image
சென்னை:-சிம்பு,ஹன்சிகா அடுத்தடுத்து வாலு, வேட்டை மன்னன் படங்களில் இனைந்து நடித்தனர். இந்தப் படங்களில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது.இருவருமே ட்விட்டர் வழியாக தங்கள் காதலை வெளிப்படுத்தினார்கள். ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் தனக்கு யாருடனும் உறவில்லை என்று அறிவித்த ஹன்சிகா, தான் இனி தனி ஆள் என்று ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டார்.ஹன்சிகா அறிவிப்பு வெளியிட்ட இரண்டு வாரங்களுக்குள் தானே முன்வந்து ஹன்சிகாவுடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லைஉறவும் இல்லை என அறிவித்தார் சிம்பு.இப்போது மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டதாக சில பத்திரிக்கைகளில் செய்திகள் பரவியுள்ளது.

சிம்பு,ஹன்சிகா இருவரும் சேர்ந்து நடிக்கும் ‘வாலு’ படம் முடிவு அடையும் தருவாயில் உள்ளது. இந்த படத்தின் கடைசி பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.
இதனால் மீண்டும் இருவரும் இணைந்து விட்டனர் என்று செய்திகள் பரவ உடனே ஹன்சிகா தன் டுவிட்டர் பக்கத்தில் நான் யாரையும் காதலிக்கவில்லை இது எல்லாம் வதந்தி என்று கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி