செய்திகள்,திரையுலகம் இறுதிக்கட்டத்தை எட்டியது ‘அஞ்சான்’ படப்பிடிப்பு!…

இறுதிக்கட்டத்தை எட்டியது ‘அஞ்சான்’ படப்பிடிப்பு!…

இறுதிக்கட்டத்தை எட்டியது ‘அஞ்சான்’ படப்பிடிப்பு!… post thumbnail image
சென்னை:-சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் படம் ‘அஞ்சான்’.இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மும்பை, மஹாராஷ்டிரா, கோவா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது.இந்நிலையில் அஞ்சான் படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கோவாவில் மிகப் பிரம்மாண்டமான செட் ஒன்றை அமைத்து அதிரடி சண்டை காட்சிகளை படம் பிடித்து வருகிறார்கள்.

கடந்த புதன் கிழமை தொடங்கிய இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் ஞாயிறு வரை தொடர்ந்து நடைபெறுகிறது.இது முடிந்ததும் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் படமாக்கப்படவேண்டுமாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி