செய்திகள்,திரையுலகம் தன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்!…

தன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்!…

தன்னுடன் மீண்டும் அண்ணியை நடிக்க வைக்கும் விஷால்!… post thumbnail image
சென்னை:-ரேடியோ வர்ணனையாளராக இருந்த ஸ்ரேயா ரெட்டி சாமுராய் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அரிமுகம் ஆனார். பின்னர் திமிறு, வெயில்,பள்ளிக்கூடம், காஞ்சிவரம் போன்ற மிகக்குறைந்த படங்களே நடித்த அவர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து விலகினார்.

திருமணத்திற்கு பின்னர் தயாரிப்பாளராக மாறிய ஸ்ரேயா ரெட்டி தோரணை, வெடி, போன்ற திரைப்படங்களை தயாரித்தார். இரண்டு படங்களுமே படுதோல்வி அடைந்தது.
தயாரிப்பாளராக வெற்றி பெற முடியாததால் மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி.

விஷாலின் அடுத்த படமான பூஜை படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ரேயா ரெட்டி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரேயா ரெட்டி மீண்டும் சினிமாவில் நடிப்பதை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா விரும்பவில்லை என்று கூறப்பட்டாலும், விஷால் தனது அண்ணியை நடிக்க வைப்பதில் விருப்பம் காட்டுவதாக கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி