செய்திகள்,விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!…

தொலைக்காட்சி நிறுவனத்திடம் ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்கும் டோனி!… post thumbnail image
சென்னை:-ஐபிஎல் 6-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தவர் டோனி. அந்த ஐபிஎல் போட்டி முடிந்த பின்னர் பிக்ஸிங் விவகாரம் பெரும் விஸ்வரூபமெடுத்தது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகளில் ஒருவரான குருநாத் மெய்யப்பனும் சிக்கினார். இந்நிலையில் ஜீ தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி ஒன்றில் சென்னை அணி கேப்டன் டோனிக்கும் பிக்ஸிங்கில் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

இந்த செய்திக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதற்காக ரூ100 கோடி நஷ்ட ஈடு கோரி டோணி வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டோனி தொடர்பான செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி