செய்திகள்,திரையுலகம் மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…

மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!…

மகளை வைத்து ஆபாச காட்சி எடுத்ததாக தயாரிப்பாளர் மீது நடிகையின் தாய் பரபரப்பு புகார்!… post thumbnail image
சென்னை:-வளசரவாக்கம் காவேரி நகரில் வசிப்பவர் நிர்மலா (40). இவரது மகள் பாக்யஸ்ரீ (18). உயிருக்கு உயிராய், நாடோடி பறவை ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், ராயலா நகர் காவல் நிலையத்தில் நிர்மலா நேற்று முன்தினம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட தயாரிப்பாளர் ரவிதேவன் (40) என்பவர் சில நாட்களுக்கு முன் என்னை சந்தித்தார். நாங்கள் எடுக்கும் குறும்படத்தில் உங்கள் மகள் பாக்யஸ்ரீயை நடிக்க வைக்கிறோம் என்று ஒப்பந்தம் செய்தார். குறும்பட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ராமாபுரம் பகுதியில் நடந்து வந்தது.நேற்று முன்தினம் நடந்த படப்பிடிப்புக்கு நான் சென்றேன். நான் இருக்கும்போது பாக்யஸ்ரீயை பெண் பார்க்கும் காட்சியை படம் பிடித்தனர்.

அதன்பின்னர் ஆபாச காட்சி படமாக்கினர். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோர் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினர். ஒப்பந்தப்படி காட்சி எடுக்காமல் என் மகளை வைத்து ஆபாச காட்சி எடுக்கின்றனர். எனவே, தயாரிப்பாளர் ரவிதேவன், இயக்குனர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி