செய்திகள்,திரையுலகம் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட நடிகை பத்மப்ரியா கண்டிஷன்!…

குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட நடிகை பத்மப்ரியா கண்டிஷன்!…

குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட நடிகை பத்மப்ரியா கண்டிஷன்!… post thumbnail image
சென்னை:-தவமாய் தவமிருந்து, சத்தம் போடாதே போன்ற படங்களில் நல்ல கேரக்டர் ரோலில் நடித்த பத்மப்ரியா, சமீபத்தில் ரிலீசான பிரம்மன் படத்தில் சசிகுமாரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடினார். அந்த பாடல் படத்தில் நல்ல ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் பல படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனம் ஆட பத்மப்ரியாவுக்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. இப்படியே போனால் உன்னை ஐட்டம் டான்சராக மாற்றிவிடுவார்கள். அதனால் ஐட்டம் டான்சை தவிர்த்துவிட்டு, நல்ல கேரக்டரில் நடிக்க முயற்சி செய் என்று அவரது தோழிகள் ஆலோசனை கூறினர். ஆனால் பத்மப்ரியா, வருகிற அனைத்து ஐட்டம் டான்ஸ் வாய்ப்புகளையும் ஒப்புக்கொள்கிறார். அவர் தயாரிப்பாளர்களிடம் வைக்கும் ஒரே நிபந்தனை, ஒரு படத்தில் நடித்தால் தனக்கு எவ்வளவு சம்பளம் வருமோ அதை இந்த ஒரே பாடலில் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான்.

ஒரு படத்துக்கு ஆறுமாதம், ஒரு வருடம் என்று கால்ஷீட் கொடுத்துவிட்டு தவித்து கொண்டிருப்பதை விட ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆடிவிட்டு அதே தொகையை சம்பளமாக பெறும் பத்மப்ரியாவின் டெக்னிக்கை அவரது வட்டாரங்கள் வியப்புடன் பார்க்கின்றன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி