இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டது. சூர்யா தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வெங்கட்பிரபுவுக்கு கொடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. பிரியாணி படத்தில் கார்த்தியை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்த சூர்யாவை இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் சொந்த நிறுவனமான 2டி நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.
சூர்யாவிடம் முழுத்திரைக்கதையையும் காண்பித்து வெங்கட்பிரபு ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் படப்பிடிப்பை வரும் மே மாதம் முதல் துவக்கலாம் என சூர்யா கூறியதாகவும் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்திலும் ப்ரியங்கா சோப்ரா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.இந்த படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளிவர இருக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி