சென்னை:-‘ஜெயம்கொண்டான்’, ‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் புதிய படம் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’. இப்படத்தில் விமல் மற்றும் சூரி ஆகியோர் இரண்டு ராஜாக்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். படத்தின் போஸ்டரை பார்க்கும்போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
சமீபகாலமாக காமெடியில் கலக்கி வரும் சூரி, இப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். குளோபல் இன்போடெயின்ட்மெண்ட் நிறுவனம் மூலம் மைக்கேல் ராயப்பன் படத்தை தயாரிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி