அவர் தன் உதவியாளருடன் இளைஞரின் முதுகில் அந்த சின்னத்தை வரைந்து தருவதாக ஒப்புக்கொண்டு அதற்குரிய பணத்தையும் பெற்றுகொண்டார். சில மணி நேரங்களில் வரைந்து முடித்துவிட்டதாக கூறி இருவரும் சென்றுவிட்டனர்.பின்னர் அந்த இளைஞர் தனது முதுகில் இருக்கும் சின்னம் சரியாக இருக்கின்றதா என்று தனது நண்பரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது, அவரது முதுகில் டாட்டூ கலைஞர்கள் வரைந்தது yin-yang சின்னம் அல்ல, அது 40 செ.மீ நீளமுள்ள ஆணுறுப்பின் டாட்டு என்று தெரிந்தது.
இதனால் கோபமடைந்த அந்த இளைஞர் இரண்டு டாட்டு கலைஞர்கள் மீது வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் இரண்டு டாட்டூ கலைஞர்களுக்கும் ஒரு வருட சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி