செய்திகள்,திரையுலகம் யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…

யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா…

யாருடனும் உறவு இல்லை ‘சிங்கிளாக’ தான் இருக்கிறேன் – ஹன்சிகா… post thumbnail image
சென்னை:-சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான் திருமணம் என்றார்.

இது சிம்பு, ஹன்சிகா காதலில் பிளவை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. பாண்டிராஜ் இயக்கும் படத்தில் சிம்புவும், நயன்தாராவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதுவும் ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இருவரும் பிரிந்த விட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் திடீரென்று நயன்தாரா தோழிதான். ஹன்சிகாதான் என் காதலி என்று சிம்பு பேட்டி அளித்தார்.

இதையடுத்து மீண்டும் இருவரும் சேர்ந்து விட்டார்கள் என்றனர். ஆனால் ஹன்சிகா இதனை மறுப்பதுபோல் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன் என்று டுவிட்டரில் கூறி உள்ளார். கடந்த 14–ந்தேதி காதலர் தினத்தில் இருவரும் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி