செய்திகள்,திரையுலகம் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா…

ஷங்கரின் ‘ஐ’ படத்தில் நடிக்க மறுத்த ஜீவா… post thumbnail image
சென்னை:-ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் ஜீவா. அப்போதே அடுத்த படத்தில் உங்களை பயன்படுத்துகிறேன் என்று ஷங்கர் கூறி இருந்தாராம்.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் ஐ படத்தை இயக்க முடிவு செய்த ஷங்கர். அதில் வில்லன் வேடத்தில் நடிக்க ஜீவாவிடம் கேட்டாராம். ஆனால் கால்ஷீட் ஒதுக்க முடியாத நிலையில் இருப்பதாக ஜீவா கூறிவிட்டதாக தெரிகிறது. ஷூட்டிங் தொடங்குவதற்கு முன் ஷங்கரிடமிருந்து அழைப்பு வந்தபோது ஜீவா சந்தோஷப்பட்டாராம். தான்தான் ஹீரோவாக நடிக்கப் போகிறோம் என்று நினைத்துள்ளார் ஜீவா. ஆனால் வில்லன் வேடம் என்றதும் நொந்துபோனாராம்.

இதற்கு முன் அமிதாப் பச்சன், ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோரை கூட தனது படங்களில் வில்லனாக நடிக்க அழைத்தார் ஷங்கர். ஆனால் அவர்கள் ஹீரோவாக நடித்து வருவதால் வில்லன் வேடத்தை ஏற்க மறுத்துவிட்டனர். ஐ படத்தில் ஜீவா நடிக்க மறுத்த வேடத்தில்தான் இப்போது பாலிவுட் நடிகர் உபேந்திர படேல் நடிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி