செய்திகள்,திரையுலகம் சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…

சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு…

சித்தார்த், சமந்தா ஓட்டலில் ரகசிய சந்திப்பு… post thumbnail image
ஐதராபாத்:-நட்சத்திர ஓட்டலில் சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக சந்தித்து மனம் விட்டு பேசினார்கள். இருவருக்கும் காதல் முறிந்து விட்டதாகவும், சந்திப்புகளை தவிர்க்கிறார்கள் என்றும் சமீபத்தில் வெளியான செய்திகளை இது பொய்யாக்குவதாக இருந்தது என்றனர் ஓட்டல் ஊழியர்கள்.

சித்தார்த்தும், சமந்தாவும் ரகசியமாக காதலிக்கின்றனர். கோவிலில் குடும்பத்தினருடன் ஜோடியாக சாமி கும்பிட வந்த போது இந்த காதல் அம்பலமானது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது.சமந்தா தெலுங்கிலும், சித்தார்த் தமிழிலும் பிசியாக நடிக்கின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் இவர்கள் காதலில் திடீர் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் பரவின. தற்போதைய சந்திப்பு அதை வதந்தி என ஊர்சிதபடுத்தி உள்ளது.

ஐதராபாத்தில் பெட்டம்மா கோவில் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் ஆட்கள் இல்லாத இடத்தில் டின்னர் டேபிள் முன் அருகருகே உட்கார்ந்து இருந்தனர். இருவரையும் பார்க்க புது மணதம்பதி போல் இருந்தார்கள் என்றார் அங்கிருந்த ஊழியர் ஒருவர். ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டு இருந்தார்கள். அதில் காதல் நெருக்கத்தை பார்க்க முடிந்தது என்றும் ஓட்டல்காரர்கள் தெரிவித்தனர். இரவு நெடு நேரம் தனிமையில் உட்கார்ந்து இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி