செய்திகள்,திரையுலகம் நடிகையிடம் சில்மிஷம்…

நடிகையிடம் சில்மிஷம்…

நடிகையிடம் சில்மிஷம்… post thumbnail image
பெங்களூர்:-இந்தி, கன்னட படங்களில் நடித்து வருகிறார் பூனம் பாண்டே. 2011ம் ஆண்டு நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் நிர்வாணமாக ஓடத் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

மேலும் இணைய தளங்களில் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் இவர் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கவர்ச்சி ஆட்டம் ஆட சென்றார். அப்போது அவரை சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் ரவுடிகள் கூட்டம் துரத்தியது.இந்த சம்பவம் பற்றி பூனம் பாண்டே கூறும்போது, பெரிய தொகை ஒன்றுக்கு என்னை ஓட்டலில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்தார்கள். 100 பாதுகாவலர்கள் எனக்கு பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். நான் நடனம் ஆடி முடித்தபோது என்னிடம் சில்மிஷம் செய்யும் எண்ணத்துடன் ஒரு ரவுடி கூட்டம் என்னை துரத்தியது. அவர்கள் குடித்திருந்தனர். அதைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து நான் என் அறையை நோக்கி தப்பி ஓடினேன். என் வாழ்நாளில் இப்படி நான் ஓடியதில்லை. ஆனாலும் அவர்கள் விடாமல் துரத்தினார்கள்.அறைக்குள் நான் சென்றதும் அவர்களும் உள்ளே வர முயன்றார்கள். இதற்கிடையில் பாதுகாவலர்கள் குறுக்கிட்டு அந்த கூட்டத்தை துரத்தினார்கள். இந்த சம்பவம் எனக்கு அதிர்ச்சி அளித்துள்ளது’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி