செய்திகள் விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…

விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…

விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி… post thumbnail image
நிஜாமாபாத்:-ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். பிரசவ வலி அதிகமாக இருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றார்.

உடனே அந்த குழந்தையை ஜன்னல் வழியே வெளியே வீசினார். காயத்துடன் கிடந்த அந்த குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தது.அந்த மாணவி 6–ம் வகுப்பில் இருந்து அந்த விடுதியில் தங்கி இருந்து வருகிறார். உறவுக்கார வாலிபர் ஒருவர் ஏமாற்றி கர்ப்பமாக்கி உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி