செய்திகள் பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…

பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்…

பூஜைக்கு சென்ற பெண் சாமியாருடன் மாயம்…கணவர் புலம்பல்… post thumbnail image
மேட்டுப்பாளையம்:-மேட்டுப்பாளையம் ஹவுசிங்யூனிட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சண்முக வடிவு என்ற கலா (44). சம்பவத்தன்று சண்முக வடிவு அதிகாலை 5 மணிக்கு கேரள மாநிலம் மீன்குளத்தி அம்மன் கோவிலுக்கு செல்வதாக கணவர் ரவிச்சந்திரனிடம் அனுமதி கேட்டார். அவரும் கோவிலுக்கு சென்று வர தடை விதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து சண்முகவடிவு 20 பவுன் தங்க நகை அணிந்து ரூ.7 ஆயிரம் பணத்துடன் வீட்டை விட்டு புறப்பட்டு சென்றார். கேரளாவுக்கு செல்வதாக கூறிய சண்முகவடிவு அங்கு செல்லாமல் மேட்டுப்பாளையத்திற்கு அருகில் உள்ள மொடப்புதூரில் பூஜை நடத்தும் கேரளாவை சேர்ந்த சாமியார் சுரேஷ் என்பவரை பார்க்க சென்றார்.
அன்று மதியம் சண்முகவடிவு கணவர் ரவிச்சந்திரனுக்கு போன் செய்து இரவு பூஜை உள்ளது. பூஜை முடித்து காலை வருவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன் இரவு பூஜையெல்லாம் வேண்டாம். ஒழுங்காக புறப்பட்டு வீடு வந்து சேர் என்று திட்டினார்.

அப்போது சாமியார் சுரேஷ், சண்முக வடிவிடம் இருந்து போனை வாங்கி “அக்காள் இரவு பூஜையை முடித்துவிட்டுத்தான் வருவார்” என்று மிரட்டும் தோணியில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன் போனை தன் மனைவியிடம் கொடுக்கும்படி கூறினார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.சந்தேகம் அடைந்த ரவிச்சந்திரன் மனைவி சண்முக வடிவை தேடி சாமியார் சுரேஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு சுரேஷின் தாயார் மட்டும் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது இரவு பூஜையில் சண்முகவடிவு, ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு அடுத்த நாள் காலை சென்றுவிட்டதாக கூறினார். இது ரவிச்சந்திரனுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சண்முகவடிவு வீட்டுக்கும் வரவில்லை. எனவே தெரிந்தவர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீடுகளில் சண்முகவடிவு குறித்து விசாரித்தார்.தகவல் எதுவும் கிடைக்காததால் ரவிச்சந்திரன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சண்முகவடிவு, சாமியார் சுரேஷ் ஆகியோரை தேடி வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி