முதன்மை செய்திகள்,விளையாட்டு ஈரோட்டில் பாரதியார் தின மாநில அளவிலான விளையாட்டு போட்டி …

ஈரோட்டில் பாரதியார் தின மாநில அளவிலான விளையாட்டு போட்டி …

ஈரோட்டில்  பாரதியார் தின மாநில அளவிலான விளையாட்டு போட்டி … post thumbnail image
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்

31–வது பாரதியார் தின மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி 9–ந்தேதி முதல் 11–ந்தேதி வரை தமிழக அரசு சார்பில் நடைபெற இருக்கிறது. பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் முதலில் பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்டு பின்னர், மாவட்ட மற்றும் மண்டல அளவிலும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளில் முதலிடம் மற்றும் 2–வது இடம் பெற்றவர்களும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விடுதி மாணவ–மாணவிகளுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் முதல் இரு இடம் பிடித்தவர்களும் மாநில அளவிலான பாரதியார் தின குழு போட்டியில் பங்கேற்க தகுதியானவர்கள் ஆவர்.

இதில் கைப்பந்து, கபடி, பேட்மிண்டன், டென்னிஸ், ஆக்கி, டென்னிஸ் உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் இடம் பெறும். அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 5 ஆயிரம் மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள் பங்கேற்கிறார்கள். வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு ரூ.1200, 2–வது பரிசு ரூ.800, 3–வது பரிசு ரூ.400 வீதம் வழங்கப்படும். மொத்தம் 786 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.6லட்சத்து 28 ஆயிரத்து 800 பேருக்கும் போட்டி நடைபெறும் இடத்திலேயே வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி