செய்திகள்,திரையுலகம் ரஞ்சிதா பிரச்சனை…பெரிய பிரச்சனை போல…

ரஞ்சிதா பிரச்சனை…பெரிய பிரச்சனை போல…

Nithiyanada-ranjitha

காணொளி:-

கிருஷ்ணகிரி வந்த காஞ்சி சங்கராச்சாரியார் ” ஆதீனமாக பட்டம் சூட்டிக் கொள்பவர்கள் தலையில் மொட்டை போட்டு ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற விதி முறை உள்ளது. நித்யானந்தா அதையெல்லாம் மீறி மதுரை ஆதீனமாக முடி சூட்டிக் கொண்டுள்ளார்.
மேலும் ரஞ்சிதா எப்போதும் நித்யானந்தாவுடனே காணப் படுகிறார். இதுவும் ஆன்மீக விதிமுறைக்கு எதிரானது.

பெருமை வாய்ந்த மதுரை ஆதீனத்தில் நித்யானந்தா ரஞ்சிதாவுடன் வலம் வருவது பெருத்த அவமானம். ரூ 1 கோடி லஞ்சம் கொடுத்தே மதுரை ஆதீனமாக நித்யானந்தா பட்டம் சூட்டிக் கொண்டார். நித்யானந்தா மதுரை மடத்தில் இருந்து வெளியேற வேண்டும். ஆன்மீகவாதிகள் நித்யானந்தாவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததை நான் ஆதரிக்கிறேன் ”என்று தெரிவித்து இருந்தார்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நித்யானந்தா ” நான் காஞ்சி மடத்தை மதிக்கிறேன். யாரோ கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் காஞ்சி பெரியவர் தவறுதலாகக் கூறி இருக்கிறார்.

நான் செல்லும் இடத்திற்கெல்லாம் ரஞ்சிதாவை அழைத்துச் செல்வதாகக் கூறி இருக்கிறார். ரஞ்சிதா என்னுடன் இல்லை. காஞ்சி ஜெயேந்திரர் ரஞ்சிதா குறித்துக் கூறிய கருத்துக்களை 10 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். மதுரை ஆதீனமாக நான் பட்டம் சூட்டிக் கொண்ட விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம் ” என்று எச்சரித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி