திரையுலகம் ராதிகா ஆப்தேவின் கவர்ச்சியில் கலவரமான ரசிகர்கள்

ராதிகா ஆப்தேவின் கவர்ச்சியில் கலவரமான ரசிகர்கள்

ராதிகா ஆப்தே குட்டைப் பாவாடையும் சிறிய மேலாடையும் அணிந்து வந்ததால் ரசிகர்கள் உற்சாகம் கட்டுக்கு அடங்காமல் போனது இதனால் தொடர்ந்து “வெற்றிச் செல்வன்” தமிழ் படத்தின் ஷூட்டிங் நடத்த முடியாமல் போனது. அஜ்மல், ராதிகா ஆப்தே ஜோடியாக நடிக்கும் படம் ‘வெற்றிச் செல்வன்’. இதன் படப்பிடிப்பு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. பஹல்காம் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது ஏராளமான ரசிகர்கள் ராதிகா ஆப்தே கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பத்தை பார்த்ததும் நிலைமை கட்டுக்கு அடங்காமல் போனது.

அவரை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாகமடைந்து, ஆரவாரம் செய்தனர். தங்களின் செல்போனிலும் கேமராவிலும் அவரது கவர்ச்சியை மடக்கி மடக்கி படம் பிடித்தனர். இதனால் படப்பிடிப்பு பாதித்தது படக்குழுவினர் . படம் எடுக்க வேண்டாம் என்று ரசிகர்களை எச்சரித்ததும் ஆத்திரமடைந்த கூட்டத்தினர், படப்பிடிப்பு குழுவினரை அடிக்கப் பாய்ந்தனர் மொழிபுரியாத இடத்தில் வசமாக மாட்டிக் கொண்டேமே என ஒட்டு மொத்த படக்குழுவினரும் அரள ஆரம்பித்துவிட்டனர். ராதிகா ஆப்தேவை பாதுகாப்பாக அழைத்து கேரவேனில் ஏற்றி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இதுகுறித்து அஜ்மல் கூறும்போது, ”படப்பிடிப்பை காண வந்த கூட்டத்தில் சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது உண்மைதான்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி