திரையுலகம் ‘நீதாண்டா நடிகன்’ பாராட்டிய பாலா…

‘நீதாண்டா நடிகன்’ பாராட்டிய பாலா…

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

விஷாலை பொருத்தவரை ‘அவன் இவன்’ படம் விரும்பி சுமந்த பாரம்! “ஜனவரியில் பிரபுதேவா படத்தில் நடிக்க போகனும். கொஞ்சம் ஃபார்ஸ்ட் ப்ளீஸ்” என்று பாலாவை நச்சரித்துக் கொண்டிருந்தாலும், இந்த படம் விஷாலின் கேரியரை வேறு மாதிரி திசை திருப்பப் போகிற படம். இன்னும் சுருக்கமாக சொன்னால் விஷாலுக்கு ஒரு தேசிய விருது உறுதி என்கிறார்கள் இப்போதே!

அப்படியென்ன பொல்லாத நடிப்பை கொட்டியிருக்கப் போகிறார் என்று குமட்டில் இடித்துக் கொண்டு குறி சொல்லப் புறப்படுகிறவர்கள், ஒரே ஒரு காட்சியில் விஷால் என்ன செய்தார் என்பதை சொன்னால் ‘கப்சிப்’ ஆகிவிடுவார்கள்.

காடும் மரங்களுமே வாழ்க்கை என்று வாழ்ந்த சந்தன வீரப்பன் கூட இப்படி ஒரு சாகசத்தை செய்திருக்க முடியாது. ஒரு காட்சியில் “இப்படியிருந்தா நல்லாயிருக்கும்” என்று விரும்பினாராம் பாலா. ஃபைட் மாஸ்டர் கூட அது சாத்தியமில்லை என்று நகத்தை கடிக்க, முடியும் சார் என்றார் விஷால். “ஒரு வாரம் டைம் குடுங்க. செஞ்சு காட்றேன்” என்று அவர் கூறியதை அவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை பாலாவும். ஆனால் சொன்ன மாதிரியே ஒரு வாரம் கழித்து ‘நான் ரெடி’ என்றாராம்.

அது என்ன காட்சி? ஒரு ஓணானை போல மரத்தின் உச்சியில் இருந்து தலைகீழாக ஊர்ந்தபடியே கீழே இறங்கி வர வேண்டும் விஷால். அதைதான் அன்றைக்கு செய்து காட்டினார் அவர். அப்படியே பாய்ந்து சென்று விஷாலை கட்டிக் கொண்டாராம் பாலா. “நீதாண்டா நடிகன்” என்று பாலா பாராட்டியதை நாளைக்கு கிடைக்க போகும் தேசிய விருதின் முன்னோட்டமாக எடுத்துக் கொண்டிருப்பார் விஷால்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.